
வட மாகாணசபை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் பொறுப்பேற்கப்பட்டதன் பின்னர், முதற்தடவையாக பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவு திட்ட நிதி வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
இதில் மாகாணசபை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 4 மில்லியன் ரூபா நிதியும், அமைச்சர்களுக்கு 5 மில்லியன் ரூபா நிதியும், முதலமைச்சருக்கு 6 மில்லியன் ரூபா நிதியும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைவாக உறுப்பினர்கள் மேற்படி நிதிக்கான தங்கள் திட்டங்களை வழங்கும்படி அண்மையில் கேட்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் 8 உறுப்பினர்கள் மட்டுமே அந்த திட்டத்தை வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி ஆளும் கட்சியை சேர்ந்த 5 உறுப்பினர்களும், எதிர்க்கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்களுமாக 8 உறுப்பினர்களின் திட்டங்களே மாகாணசபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீ.வி.கே. சிவஞானம், த.சித்தார்த்தன், ம.தியாகராசா, இந்திரராசா, ப.அரியரட்ணம் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த சி.தவராசா, ஜெயதிலக்க, திலக்கரட்ண ஆகிய 8 உறுப்பினர்களே தங்கள் நிதி திட்டங்களை வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மற்றய 25 உறுப்பினர்கள் தமது நிதி ஒதுக்கீட்டிற்குரிய திட்டங்களை இதுவரையில் சமர்ப்பிக்கவில்லை. என மாகாணசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக