வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

யாழில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் மீது தாக்குதல்!!

யாழில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந் மீது இனம் தெரியாத நபர்கள் நேற்று இரவு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள்.

நல்லூர் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது நல்லூர் செட்டிதெரு வீதியில் வைத்து இரவு 9 மணியளவில் இவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத் தாக்குதலில் முகத்தில் காயம்
அடைந்த நிலையில் விஜயகாந் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி நேற்று முன்தினம் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக விஜயகாந் தலைமையில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினர் கவனயீர்ப்பு போராடத்தினை நடாத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக