வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டும்! கூட்டமைப்பு குழுவினர் சுஷ்மாவிடம் கோரிக்கை!!

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடம் வலியுறுத்தினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுவினர். புதுடில்லி சென்றுள்ள கூட்டமைப்பு குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை காலை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து
கலந்துரையாடினர்.

இதன்பின்னர் இந்திய ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் - வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடனான சந்திப்பு திருப்தியாக இருந்தது, தமிழர் பிரச்சினையில் இந்தியா ஆக்கபூர்வமாக செயற்படவேண்டும் என்று இந்தச் சந்திப்பில் வலியுறுத்தினோம். இலங்கையில் தமிழர் பகுதிகளில் சி்ங்கள குடியேற்றங்கள் அதிகரிக்கின்றன. சிங்கள குடியேற்றங்களை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.- இவ்வாறு சம்பந்தன் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுவினர் நாளை சந்திப்பர் என்று தெரிவிக்கப்பட்டுளள்து. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக