
மாத்தளையில் இன்று நடைபெற்ற 119ம் தேசிய தஹாம் பாடசாலை நாள் நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பௌத்த சாசனத்தை இல்லாதொழிக்கும் சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டின் பிரதமர் என்ற ரீதியில் நீங்கள் இதனை அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.
எதிர்கால தேர்தல் காரணமாக பௌத்த சாசன பாதுகாப்பு சட்டத்தை கூட கிடப்பில் போட முயற்சிக்கப்படுவதாக நம்பகத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.
விஹாரை பூமியில் அரசாங்கத்தின் செலவில் ஏதேனும் நிர்மாணிக்கப்பட்டால் அதன் சட்ட பூர்வ உரிமை அரசாங்கத்தைச் சாரும் என மத்திய மாகாண விஹாரைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் கருத்து வெளியிட வேண்டுமென உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் பிரதமர் டி.எம் ஜயரட்னவும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக