திங்கள், 4 ஆகஸ்ட், 2014

சீன ஜனாதிபதி இலங்கை, இந்தியா, பாகிஸ்தானுக்கு விஜயம்..!!!!

எதிர்வரும் வாரங்களில் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
மூன்று நாட்டுக்கு அரசாங்கங்களுடனும் ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்வதே சீன ஜனாதிபதியின் விஜய நோக்கமாக உள்ளது.

இந்தநிலையில் சீன அதிகாரிகள் தமது ஜனாதிபதியின் விஜய திகதிகளை தயாரித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் டெய்லி டோன் பத்திரிகை செய்தியின்படி சீன ஜனாதிபதி இந்த மாத இறுதியில் தமது நாட்டுக்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர் பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக