வியாழன், 24 ஜூலை, 2014

கறுப்பு ஜுலையின் 31வது வருட நினைவு: லண்டனில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள் இணைப்பு)

தமிழர்களின் மீதான இனவழிப்பில் வடுவாகி நிலைத்துவிட்ட கறுப்பு ஜுலையின் 31வது வருட நினைவுநாளான நேற்று லண்டனில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
சிங்களப் பேரினவாத அரசின் அராஜகத்தை எதிர்க்கும் முகமாக பிரித்தானியத் தமிழர் பேரவையால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.

நேற்று மாலை மாலை 4:00
மணியளவில் பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தின் முன்பு இப்போராட்டம் ஆரம்பமாகியது.

பேரினவாத அரசுக்கு எதிரான பதாகைகளைத் தாங்கியபடி மக்கள் தங்கள் இறுதி இலட்சியத்துக்காக உறுதியுடன் குரல் கொடுத்தனர்.

இப்போராட்டத்தில் பெரும் திளரான புலம் பெயர் தமிழர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக