வியாழன், 24 ஜூலை, 2014

வவுனியா பெரியகோமரசன்குளம் பகுதியில் கிறிஸ்தவ சிலைகள் அடித்துடைப்பு!!

வவுனியா பெரியகோமரசன்குளம் கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்தவ மக்களின் வழிபாட்டுத் தலமாகிய வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வாரி மலையில் அமைந்திருந்த சிலைகள் நேற்றிரவு சில விசமிகளால் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்த வரலாற்று சிறப்புமிக்க மலைப் பகுதியில் பதினைந்து பகுதிகளாக சிலைத் தொகுதிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் எட்டுத் தொகுதி
சிலைகளே இவ்வாறு விசமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.

இந்த எட்டு சிலைகளில் குறிப்பாக யூதர்களின் சிலைகளே அதிகமாக அடித்து உடைக்கப்பட்டிருந்தன. அது தவிர மாதாவின் உருவச்சிலை ஒன்றும் அடித்து உடைக்கபட்டிருந்தது.

இது குறித்து வவுனியா பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக