சனி, 21 ஜூன், 2014

மாகம்புற துறைமுகத்தில் எண்ணெய்த்தாங்கிகள்..!!!!

ஹம்பாந்தோட்டை மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச துறைமுகத்திற்கு வருகை தரும் கப்பல்களுக்கு எண்ணெய் விநி யோகிப்பதற்காக நிர்மாணிக்கபட்டுள்ள எண்ணெய் தாங்கிகள் நாளை 22 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பிரியத் பந்து விக்கிரம தெரிவித்தார்.

கப்பலினூடாக கொண்டுவரப்படும் எண்ணெய் இங்கு களஞ்சியப் படுத்தப்பட்டு விநியோகிக்கப்பட வுள்ளது. ஒரே தடவையில் 45000 தொன் எண்ணையை களஞ்சியப்படுத்தக் கூடிய வசதி எண்ணெய் தாங்கிகளில் உள்ளதோடு, இதில் எரிவாயு மற்றும் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆகியவற்றை களஞ்சியப்படுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

எரிவாயு 20000 கிலோ மீற்றரும் விமான எண்ணெய் 23000 மெட்ரிக் தொன்னை களஞ்சியப்படுத்துவதற்கான மூன்று எண்ணெய் தாங்கிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக