ஞாயிறு, 22 ஜூன், 2014

வவுனியா அருணோதயா தேசிய பாடசாலை மற்றும் முன்பள்ளி ஆகியவற்றின் விளையாட்டு போட்டி!! (படங்கள் இணைப்பு)

(வன்னியன்) வவுனியா அருணோதயா  தேசிய பாடசாலை மற்றும் முன்பள்ளி ஆகியவற்றின் விளையாட்டு போட்டி இன்று மாலை 2.00 மணியளவில் கலைமகள் சனசமூக விளையாட்டு அரங்கத்தில் அதிபர் திரு.எஸ்.தயாளன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.வ.சிவசக்தி ஆனந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத்தலைவர்  திரு.சிவலிங்கம், வடக்கு வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.வாகீசன், நிலையப் பொறுப்பு சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் திரு.மனோகரராஜா மற்றும் கௌரவ விருந்தினர்களாக வவுனியா நகரசபை முன்னை நாள் உப நகரபிதா திரு.க.சந்திரகுலசிங்கம், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.கெனடி, மத்தியஸ்தர் உறுப்பினரும் சமாதான நீதவான் திரு.அமிர்தலிங்கம், பாவற்குளம்
கலைமகள் வித்தியாலய அதிபர் திரு.ஸ்ரீ கந்தவேல்,முன்னாள் கூட்டு றவு கல்லூரி விரிவுரையாளர் திரு.சிவசேகரம், மற்றும் வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத் தலைவர் திரு.ரவீந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் சிறார்களின் விளையாட்டு போட்டிகள்,உடற் பயிற்சி கண்காட்சிகள் மற்றும் பரிசளிப்பு வைபவங்கள் இடம்பெற்றன.









































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக