செவ்வாய், 10 ஜூன், 2014

அனைத்து மீனவர்களையும் விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு....!!

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி கடந்த இரண்டு தினங்களில் கைது செய்யப்பட்டிருந்த 82 மீனவர்களையும் விடுவிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் வலியுறுத்தலின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக அவர் இந்த வலியுறுத்தலை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் நேற்று இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக