
எதிர்வரும் பொசன் பௌர்ணமியை முன்னிட்டு அனுராதபுரம் நகரிற்கு செல்லும் பெரும் எண்ணிக்கையிலான யாத்திரிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சிவில் உடை தரித்தவர்கள், புலனாய்வுப் பிரிவினர் மற்றும் மோட்டார் போக்குவரத்துப் பிரிவினர் உள்ளிட்ட பலரும் இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பௌர்ணமி தின வழிபாடுகளுக்காக இருபது லட்சம் பேர் அனுராதபுரம் செல்வார்கள் எதிர்பார்ப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, யாத்திரை செய்வோர் குளங்களில் நீராடும் போது எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக