புதன், 20 அக்டோபர், 2010
உள்ளுராட்சி சபைத் தேர்தல்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்..!
வட மாகாணசபை நிர்வாகம் தொடர்பான கேள்வியின்போது உள்ளுராட்சி சபைத் தேர்தல்களுக்கே முதலாவதாக முன்னுரிமை அளிக்கப்படுமென பிரிட்டனின் பொதுநலவாய பாராளுமன்றசங்கத் தூதுக்குழுவிற்கு கூறப்பட்டதாக அவுட்லுக் இணையத்தளம் நேற்று தெரிவித்துள்ளது. உள்ளூராட்சிசபைத் தேர்தல்களின் பின்னர் வட மாகாணசபைக்கு தேர்தல்கள் இடம்பெறும். கிழக்கில் பின்பற்றப்பட்ட நடைமுறை அங்கும் மேற்கொள்ளப்படும். பயங்கரவாதத்தைத் தோற்கடித்த பின்னர் கிழக்கில் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் முன்னேற்றமடைந்ததாகவும் அங்கு தேர்தல்கள் திருப்திகரமானதாக நடத்தப்பட்டதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்படி பொதுநலவாயத் தூதுக்குழுவிடம் கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக