செவ்வாய், 19 அக்டோபர், 2010

வவுனியா நகர மில்வீதியில் சொகுசு ஜீப் ஒன்றின்மீது தாக்குதல்..!

வவுனியா நகர மில்வீதியில் தனியார் சொகுசு ஜீப் வாகனம் ஒன்றின்மீது திங்கட்கிழமை இரவு 7.45மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்கதலில் இருவர் காயமடைந்தனர் என்றும் தனியார் சொகுசு ஜுப் வாகனமும், அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வாகனத்தின் பொனட் பகுதிக்குள்ளேயே குண்டு வெடித்ததாகவும் இதனால் அந்த வாகனம் மோசமாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசாரும், இராணுவத்தினரும் மில் வீதியைச் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கைகளிலும் விசாரணை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். அண்மைய நாட்களாக வவுனியா நகர வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் சிக்கல்களையும் உருவாக்கியுள்ள சீட்டுப் பிரச்சினையின் காரணமாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக