சனி, 9 அக்டோபர், 2010

அரசாங்க அமைச்சர்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்-முன்னாள் ஜனாதிபதி சந்திரக்கா..!

அரசாங்க அமைச்சர்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அமைச்சர்களான விமல் வீரவன்சவும், கெஹலிய ரம்புக்வெல்லவும் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவிடம் நான் ஒருபோதும் மன்னிப்பு கோரவில்லை. எனது கணவர் விஜய குமாரதுங்கவின் சார்பில் நான், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவிடம் மன்னிப்பு கோரியதாக அமைச்சர்கள் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தனர். ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினேன் என்ற குற்றச்சாட்டு அப்பட்டானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக