செவ்வாய், 5 அக்டோபர், 2010

யாழ் கைதடி முதியோர் இல்லத்தை புனர்நிர்மாணம் செய்ய 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு..!

யாழ் கைதடி பிரதேசத்திலுள்ள (சாந்தி நிலையம்) முதியோர் இல்லத்தை புனர்நிர்மாணம் செய்ய 15 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் ஊடாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புனர்நிர்மாண பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மேற்பார்வையில் இயங்கிவரும் இந்த முதியோர் இல்லத்தில் சுமார் 140பேர் தங்கியுள்ளனர். இதற்குத் தேவையான சகல வசதிகளையும் உரியமுறையில் செய்துகொடுக்க திட்டமிட்டுள்ளோம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த முதியோர் இல்லத்தின் கட்டடங்களை உடனடியாக புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக