திங்கள், 18 அக்டோபர், 2010

கட்டுகஸ்தோட்டையில் 09மாத வீதி விபத்துகளில் 14பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் காயம்..!

கண்டி மாவட்டம், கட்டுகஸ்தோட்டை பொலிஸ்பிரிவில் கடந்த 09மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 14பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் போக்குவருத்து பிரிவின் பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக தெரிவித்துள்ளார். 2010ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இவ்விபத்துகள் இடம்பெற்றுள்ளன. வாகன சாரதிகள் போதையுடன் வாகனத்தை செலுத்துதல் மற்றும் கவனயீனமாக வாகனத்தை செலுத்துதல் போன்றவை இவ் விபத்துகளுக்கு காரணமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிகமான விபத்துக்கள் கண்டி - குருநாகல் வீதி, கண்டி - மாத்தளை வீதி ஆகிய இரண்டு பிரதான வீதிகளிலுமே நடந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக