வெள்ளி, 17 செப்டம்பர், 2010

கிழக்கில் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் மீண்டும் அதிகரிப்பு..!!

கிழக்கில் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. நேற்றுமுன்தினம் ஒருவர் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவர் மட்டக்களப்பு, திருச்செந்தூரைச் சேர்ந்த முனுசாமி நரேந்திரன் (வயது 30) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனமொன்றில் வீட்டுக்கு வந்தவர்கள் இவரை வெளியே அழைத்துச் சென்று பலவந்தமாக வானில் தூக்கிப் போட்டுச் சென்றுள்ளனர் என பொலிஸ் நிலையத்திலும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் மக்கள் தொடர்பகத்திலும் கடத்தப்பட்ட வரின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இவ்வாறானதொரு முறைப்பாடு தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் மக்கள் தொடர்பக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அண்மையில் மட்டக்களப்பு மாநகரசபையின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் பிரகாசம் சகாயமணி கடத்தப்பட்டமையும், கணவரை விடுதலை செய்யாவிட்டால் தானும் குழந்தைகளும் மாநகரசபை முன்னால் தீக்குளிப்பர் என அவரது மனைவி அறிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக