ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட உயர்பாதுகாப்பு அதிகாரிகள் சீனாவிற்கு விஜயம்..!

பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட உயர்பாதுகாப்பு அதிகாரிகள் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவ, கடற்படை மற்றும் வான்படை உயரதிகாரிகளும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரிகள் குழு ஒருவார காலம் தங்கியிருந்து சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளல் தொடர்பில் இந்த விஜயத்தின்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக