செவ்வாய், 20 ஜூலை, 2010

றொபேர்ட் ஓ பிளெக் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்..!

இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் நாளை இலங்கைக்கு வரவுள்ளார். நாளையதினம் இலங்கை வரவிருக்கும் ரொபர்ட் ஓ பிளேக், இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு வருடகாலத்தின் பின்னரான இலங்கையின் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகின்றது. இதேவேளை, இலங்கை அரசாங்கத்துடன் ரொபர்ட் ஓ பிளேக் ஆலோசனை நடத்தவிருப்பதுடன், அரசியல்க் கட்சிகள், வர்த்தகர்கள், சிவில் சமூகம் ஆகியோர்களை சந்தித்து கலந்துரையாடல்கள நடத்தவிருப்பதாக அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டது. மேலும் ரொபர்ட் ஓ பிளேக் மாலைதீவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவிருப்பதுடன், அங்கு அரசாங்க அதிகாரிகள், எதிர்க்கட்சிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் ஆகியோரைச் சந்திக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக