செவ்வாய், 20 ஜூலை, 2010

இரத்தினபுரி எம்பிலிபிடியவில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை..!

இரத்தினபுரி எம்பிலிபிடிய புதிய நகரில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார். மோட்டார் சைக்கிளிலொன்றில் வந்த இருவர் வீட்டுத் திண்ணையில் இருந்த நபரை சுட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. கொல்லப்பட்டவர் 51 வயதுடைய சுனில் சாந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக