புதன், 2 ஜூன், 2010

சர்வதேச நிபுணர்கள் குழுவை எதிர்க்கும் ஐ.தே.கட்சி..!!

இலங்கைக்கு எதிரான யுத்தக்குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசனை பெறுவதற்கு சர்வதேச நிபுணர்கள் குழு ஒன்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தால் அமைக்கப்படுகின்றமையை பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கின்றது என்று அக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் ஏன் இவ்வாறானதொரு நிபுணர்கள் குழுவை நியமிக்க முயற்சி எடுத்துள்ளார் என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அவதானம் செலுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் குறித்து மேலும் அவர் கூறியவை வருமாறு ஐக்கிய நாடுகள் சபை எமது உள் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கின்றது. அவர் இவ்வாறு நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கான காரணம் என்ன? அதா வது இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசு சிறந்த முறை யில் விளக்கம் அளிக்கவில்லையா? அந்த விடயத்தில் அரசு பலவீன மாக இருந்துள்ளதா என்று பார்க்க வேண்டும். அரசு இந்த விடயத்தில் என்ன செய்கின்றது என்று நாம் வினவுகின்றோம். ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிக்கு ஆரம்பத்திலிருந்து அரசு எதிர்ப்பு வெளியிட்டு வந்தபோதிலும் ஐ.நா. அந்த விடயத்தை கைவிடவில்லை. ஆனால் இவ்வாறு உள்விவகாரங்களில் தலையிட இடமளிக்க முடியாது. என்று ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக