புதன், 5 மே, 2010

சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஐ.தே.கட்சி செயற்படுகிறது - மனோ கணேசன் குற்றச்சாட்டு..!!

ஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவம் சிறுபான்மைமக்களுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார் வாக்குறுதி அளிக்கப்பட்டதனைப் போன்று தமது கட்சிக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றிக்கொள்ள அனுமதியளிக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார் எதிர்காலத்தில் சிறுபான்மை கட்சிகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் இதேவேளை எதிர்கட்சியின் பிரதம கொறடா பதவி நியமனம் தொடர்பில் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குறித்த பதவி ஜோன் அமரதுங்கவை விடவும் லக்ஷமன் கிரியல்லவிற்கு மிகவும் பொருத்தமானதென எதிர்கட்சியை சேர்ந்த ஒருசாரார் சுட்டிக்காட்டியுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக