செவ்வாய், 6 ஏப்ரல், 2010

தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை. பொலிஸ் மா அதிபர்

நாளை மறுதினம் இடம்பெறவுள்ள தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். இதன் பொருட்டு சகல பொலிஸ் நிலையங்களிலும் அதிக எண்ணிக்கையான விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் வன்செயல்கள் இடம்பெறலாம் என தேர்தல் ஆணையாளரால் சிபார்சு செய்யப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவிதுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக