செவ்வாய், 13 ஏப்ரல், 2010

சவுதிஅரேபியாவில் இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் பலி

சவுதி அரேபியவில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சவுதி அரேபிய ஜித்தா கந்தஹார் பாலத்திற்கு அடியில் தங்கியிருக்கும் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இந்தோனேசிய பிரஜைகளுக்கும் இலங்கையர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் குறித்த இலங்கையர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதல் சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொதுமுகாமையாளர் எல்.கே.ருஹ_ணுகே தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சவுதி அரேபிய பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் விஸா காலாவதியாதல் தொழில் பிணக்கு போன்ற காரணிகளினால் இலங்கைக்கு மீளத் திரும்பும் நோக்கில் 30க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கந்தஹார் பாலத்திற்கு கீழ் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர்களை அந்நாட்டு அரசு தடுப்புமுகாம்களில் தடுத்து வைக்க தீர்மானிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக