வெள்ளி, 23 ஏப்ரல், 2010

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றபடகு 75பேருடன் இன்று அதிகாலை மலேசியாவில் கைது..!

இலங்கையில் வாழவழியின்றி வெளிநாட்டில் ஏதிலியாக தஞ்சம் அடைய சென்ற பெண்கள் குழந்தைகள் உட்பட 75பேர் சென்ற படகை இன்று அதிகாலை மலேசியா கடலில் வைத்து பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். மலேசிய பொலிஸார் அவர்களை தரையிறங்குமாறு வற்புறுத்தி வருகின்றபோதிலும் தாங்கள் மலேசியாவில் கரை இறங்கினால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்பதால் தரையிறங்க மறுத்தவர்கள் தங்களை ஏதிலிகளாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஏதோ ஒரு நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு மலேசியா பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் இந்தோனேசியா மெராக் துறைமுகத்தில் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட நிலை இவர்களுக்கும் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக