திங்கள், 19 ஏப்ரல், 2010

இந்தோனேசியா மெராக் துறைமுகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் 254பேரும் தரையிறக்கப்படும் சாத்தியம்..!

இந்தோனேசியா மெராக் துறைமுகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் 254பேரும் பெரும்பாலும் இன்று தரையிறக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த அக்டோபர் மாதம் பதினொராம் திகதி இலங்கையிலிருந்து அகதி அந்தஸ்துகோரி அவுஸ்திரேலியா சென்ற இவர்கள் இந்தோனேசிய கடற்பகுதியில் வைத்து வழிமறிக்கப்பட்டனர். அவுஸ்திரேலிய பிரதமரின் பணிப்பின்பேரிலேயே இந்தோனேசிய அதிகாரிகளால் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் கடந்த ஆறு மாதங்களாக இவர்கள் படகிலேயே தங்கியிருந்தனர். இவர்கள் தரையிறக்கப்படவுள்ள நிலையில் அவர்களுக்கான வெளித்தொடர்புகள் தடைசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக