வியாழன், 22 ஏப்ரல், 2010

திருநாவற்குளத்தில் கொள்ளையர்கள் கைவரிசை, ஆசிரியையும் மகனும் காயம், மகளான 09வயது சிறுமி பலி..!

வவுனியா திருநாவற்குளம் சிவன்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றினுள் மூன்று பிள்ளைகளுடன் தனிமையில் இருந்த ஆசிரியையைக் கத்தியால் குத்திக் காயப்படுத்தி, அவரது 09வயது சிறுமியைக் குத்திப் படுகாயப்படுத்திய இருவர், வீட்டிலிருந்த தங்கநகைகள் மற்றும் பெறுமதியான உடைமைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் இரவு 8.30அளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் கேதீஸ்வரநாதன் ஜனனி என்ற 9 வயது சிறுமியே கொல்லப்பட்டுள்ளார். இவர் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவியாவார். அவரது தாயாராகிய கேதீஸ்வரநாதன் கௌரியாம்பிகை (35) நெஞ்சுப்பகுதியிலும் வயிற்றிலும் குத்துக்காயங்களுக்கு உள்ளாகி படுகாயமடைந்து, வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இவரது இன்னுமொரு மகனும் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார். கௌரியாம்பிகை வவுனியா மாறம்பைக்குளம் பாடசாலையில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக