திங்கள், 22 மார்ச், 2010

வவுனியா அரசஅதிபர் திருமதி சார்ள்ஸிற்கு பாராட்டு..!!

வவுனியா அரசஅதிபர் திருமதி சார்ள்ஸினது அளப்பரிய சேவைக்கு பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க பாராட்டுத் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள நிர்வாக அபிவிருத்தி நிருவகத்தில் (ஸ்லீடா) கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசாஅதிபர்களுக்கான மாநாட்டில் வைத்தே அமைச்சின் செயலாளர் வவுனியா அரசஅதிபருக்கு இந்த பாராட்டினை தெரிவித்துள்ளார். மோதல் இடம்பெற்றவேளை தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்த சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்களை சரியானமுறையில் பராமரித்து அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தும் பணியை திருமதி சார்ள்ஸ் சரிவர செய்து வந்தார். பல சந்தர்ப்பங்களில் நானே அதனை நேரில் சென்று பார்த்துள்ளேன் என்றும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக