திங்கள், 1 பிப்ரவரி, 2010

இ.போ.ச நீர்காழும்பு கிளை ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..!!

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் நீர்கொழும்புக் கிளையின் ஊழியர்கள் இன்று டிப்போ முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். டிப்போ முகாமையாளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊழியர்களை அச்சுறுத்திய டிப்போ முகாமையாளருக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை சுதந்திர தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் நீர்கொழும்பு டிப்போவின் தலைவர் அன்ரன் டொமினிக்கோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டினை நீர்கொழும்பு டிப்போ முகாமையாளர் ஆர்.எச்.பி.சேனாரத்ன நிராகரித்துள்ளார். அத்துடன் எந்தவொரு ஊழியர்மீதும் தாம் தாக்குதல் நடத்தவோ அல்லது அச்சுறுத்தவோ இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக