புதன், 10 பிப்ரவரி, 2010

96 தமிழ் கைதிகள் விடுதலை; எஞ்சியிருப்பது சுமார் 200 பேர் மட்டும் - அமைச்சர் வீ.புத்திரசிகாமணி..!

புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 96 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு 115 பேர் புனர்வாழ்வு அளிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக பிரதி நீதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த பல தமிழ் கைதிகள் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 431 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதி அமைச்சர் சுமார் 200 கைதிகளே எஞ்சியிருப்பதாகத் தெரிவித்தார்.
அதேவேளை, சுமார் 11000 முன்னாள் புலி உறுப்பினர்கள் தற்போது விடேச புனர்வாழ்வு முகாம்களில் உள்ளனர். எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக