செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த இராணுவத்தளபதி ஒருவருக்கு அரசாங்கம் கொடுத்துள்ள சிறந்த பரிசே அவர்மீதான கைது -திருமதி சரத்பொன்சேகா..!!

எனது கணவர் கைதுசெய்யப்படவில்லை. கடத்தப்பட்டிருக்கிறார். 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத்தளபதி ஒருவருக்கு அரசாங்கம் கொடுத்துள்ள சிறந்த பரிசு இது என்று திருமதி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றிரவு இராணுவப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து இன்றுமுற்பகல் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா கலந்துகொண்டு கண்ணீருடன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எனது கணவர் எந்தவொரு தவறையும் செய்யாதவர். நாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அவர் துரோகம்செய்ய எப்போதும் நினைத்ததில்லை. கைதுசெய்யப்படுவதாகக் கூறப்படுகின்றபோதும் எனக்கு இதுபற்றி அறிவிக்கப்படவில்லை என திருமதி பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக