வெள்ளி, 8 ஜனவரி, 2010

முல்லைத்தீவில் புலிகளின் இரு நிலக்கீழ் ஆயுத தொழிற்சாலைகள் கண்டுபிடிப்பு..!!

பகுதிகளிலிருந்து புலிகளின் நிலக்கீழ் ஆயுத தொழிற்சாலைகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வவுனியா விசேட பொலீசார் கைதான புலி உறுப்பினர்களின் தகவலுக்கமைய இவற்றைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த தொழிற்சாலைகயில் வெடிகுண்டுகள், கிளைமோர்கள், டெட்னேற்றர்கள் உள்ளிட்ட ஆயுத உபகரணங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இராணுவத்தினர் முன்னேறி அப்பகுதிகளை நெருங்கியவேளையில் புலிகள் அந்த தொழிற்சாலைகளை மூடிவிட்டு பின்வாங்கியுள்ளனர். இந்த தொழிற்சாலைகளில் இருந்து கிளைமோர்கள், கண்ணிவெடிகள், சக்தி வாய்ந்த குண்டுகள், 40மீற்றர் தொலைவிலிருந்து இயக்கக் கூடியதான ரிமோட்; கொன்றோலர்கள், அவற்றுக்கான சார்ஜர்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக