புதன், 27 ஜனவரி, 2010

50ற்கும் மேற்பட்ட வீத வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி வெற்றியீட்டுவார்-புளொட் தலைவர். த.சித்தார்த்தன்-

தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் பூர்வீகம் இணையம் வவுனியாவில் தங்கியிருந்து தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களை தொடர்பு கொண்டு தேர்தல் முடிவுகள் பற்றிய நிலைவரங்களைக் கேட்டபோது, மகிந்த ராஜபக்ச அவர்கள் 50ற்கும் மேற்பட்ட விகித வாக்குகளைப் பெற்று இம்முறை தேர்தலில் வெற்றியீட்டுவாரென்று கூறமுடியுமென்று தெரிவித்துள்ளார். வன்னி மாவட்டத்தின் கணிசமானளவு மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்திருப்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

1 கருத்து:

  1. வன்னி மாவட்டத்தில் சரத்பொன்சேகா 70,367 (66.86%) வாக்குகளையும், மகிந்த ராஜபக்ச 28,740 (27.31%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

    பதிலளிநீக்கு