புலிகளின் அமைப்புக்களில் ஒன்றான சுவிஸ் இளையோர் அமைப்பினர் அண்மையில் வெளிவந்திருக்கும் விஜய் நடிப்பில் உருவான வேட்டைக்காரன் திரைப்படத்தை பகிஸ்கரிக்கும்படி அறிக்கைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களின் ஊடாக கேட்டுக் கொண்டிருந்த போதிலும் கடந்த இரண்டு மூன்று தினங்களாக சுவிஸின் பல இடங்களிலுள்ள திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சியாக குறித்த திரைப்படம் காண்பிக்கப்படுவதை காணக்கூடியதாக இருந்தது. இதிலிருந்து மக்கள் இவர்களது கோரிக்கைகளை கடந்த காலத்தைப் போன்று ஏற்றுக் கொள்வதற்கோ அன்றில் இவர்களின் சர்வாதிகார கட்டளைகளுக்கு கட்டுப்படுவதற்கோ தயாராக இல்லையென்பதை தெளிவுபடுத்தி நிற்கின்றது. இந்நிலையில் இது குறித்து “அதிரடி” இணையம் மேற்படி படத்தின் சுவிஸ_க்கான உரிமையாளர்களில் ஒருவரான கஜன் என்பவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “போராட்டத்தின் இறுதிக் காலகட்டத்தின போது அதாவது இறுதி யுத்தகாலமான கடந்தாண்டு டிசம்பர் மாதம்முதல் மே மாதம்வரை நாம் இவர்களது வேண்டுகோளுக்கிணங்கவும், மக்களின் அவலங்களை மனதிற் கொண்டும் திரைப்படங்கள் எதையுமே திரையிடாது தவிர்த்தே வந்திருக்கின்றோம். இந்நடவடிக்கையினை நாம் மக்களுக்காகவும் மக்களின் அழிவுகளையும் துயரங்களையும் கருத்திற் கொண்டே மேற்கொண்டு வந்தோம். ஆனால் தற்போதைய நிலையில் தொடர்ந்தும் இவர்கள் தம்மையும் ஏமாற்றிக் கொண்டு எம்மையும், மக்களையும் ஏமாற்றும் நடவடிக்கைளில் ஈடுபடுவதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு நாம் இடங்கொடுக்கவொ ஒத்துழைப்பு வழங்கவோ தயாராகவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக