சனி, 12 டிசம்பர், 2009

கனடாவில் வைத்து விடுதலைப்புலிகளின் பீரங்கிப் பொறுப்பாளர் கோபால் கைது -திவயின தகவல் !

விடுதலைப்புலிகள் அமைப்பின் பீரங்கிப்பொறுப்பாளர் கனடாவில் வைத்து கைது செய்யப்பட்டள்ளதாக திவயின பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளது. கனடாவில் அடைக்கலம் புகுந்துள்ள அகதிகளில் கோபால் என்ற பீரங்கிப்பிரிவு பொறுப்பாளரும் ஊடுருவியிருந்தமை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. குறித்த நபர் பீரங்கிப்பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியமை விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் விடுதலைப் புலிகளின் கப்பலை செலுத்திய மாலுமி ஒருவரை கனேடியப் பொலிஸார் கைது செய்துள்ளனர். தற்போது அரசாங்கத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் கேபி எனும் குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே இந்த விடயம் தெரிய வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக