வெள்ளி, 25 டிசம்பர், 2009

நாடுகடந்த தமிழீழ அரசை நிச்சயம் உடைத்தெறிவோம் -வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம !!

நாடுகடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆரம்பித்துள்ள புதிய அச்சுறுத்தலை நாம் நன்றாக அறிவோம். அந்த கட்டமைப்பை நாங்கள் நிச்சயம் உடைப்போம் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் புலம்பெயர்ந்து வாழும் சமூகமே அரசுக்கு குற்றச்சாட்டுகளுக்கு உயிர்கொடுத்து சர்வதேச சமூகத்தை முனைப்பாக்குவதில் செயற்பட்டு வருகிறது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருவது எமக்கு நன்றாகவே தெரியும். நாடு கடந்த தமிழீழஅரசு என்ற கட்டமைப்பை உருவாக்கி தற்போது இலங்கை அரசுக்கு புதிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த கட்டமைப்புகளை நாம் நிச்சயம் உடைப்போம் அதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலனாய்வு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளோம். இந்த கட்டமைப்புகளை முற்றாக அழித்தொழிப்பதற்கு 10வருடங்களும் ஆகலாம். கடந்த மேமாதம் போர் முடிவடைந்த பின்னரும் நாம் எமது இலக்குகளை மாற்றி அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக