
வவுனியா இரவுநேர தபால்ரயில் தடம்புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த ரயில்சேவை இன்னும் வழமைக்குத் திரும்பவில்லையென ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. எனினும் கொழும்பிலிருந்து வவுனியாவுக்கான ரயில் வழமைபோன்று புறப்படுமென்றும் கல்கமுவை ரயில் நிலையத்தைச் சென்றடையும்போது போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவந்திட முடியுமென்றும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதேவேளை வவுனியாவிலிருந்து கொழும்புக்கான சேவையில் ஈடுபடும் இரவுநேர தபால் ரயில் தடம்புரண்டமை தொடர்பாக ரயில்வே திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. கல்கமுவ மற்றும் செனரத்கம ரயில் நிலையங்களுக்கிடையில் இன்றுஅதிகாலை 1.45அளவில் குறிப்பிட்ட ரயில் தடம்புரண்டமையால் 29பேர் காயமடைந்தனர். வவுனியாவிலிருந்து கொழும்புக்கான சேவையில் ஈடுபடும் இரவுநேர தபால்ரயிலில் மூன்று பெட்டிகள் இவ்வாறு தடம்புரண்டதாக ரயில்வே வணிக அத்தியட்சகர் விஜே சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக