
சரணடைந்த புலிகளின் தலைவர்கள் பாதுகாப்பமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின்பேரில் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று நாட்டு மக்களுக்கு ரூபவாகினியில் விளக்கமளிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இராணுவத் தளபதியின் குற்றச்சாட்டினையடுத்து சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்று விளக்கமளிக்குமாறு ஐ.நா அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. இதனையடுத்து அரசதரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள உடனடி நடவடிக்கையாக இன்று ஜனாதிபதி மகிந்த நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக