புதன், 23 டிசம்பர், 2009
மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கோருகிறார் பா.அரியநேந்திரன் எம்.பி..!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரபட்சமின்றி நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பிம் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மூன்றரை லட்சம் மக்களுக்கு எந்தவித நிவாரணங்களும் இதுவரையில் வழங்கப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரபட்சமின்றி உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சுக்கும், மாவட்ட அரசாங்க அதிபருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்மாதம் 8ம் 9ம் திகதிகளில் பெய்த கடுமமழை காரணமாக 14 பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 81,633 குடும்பங்களைச் சேர்ந்த மூன்றரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர்களுக்கான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கூறியிருந்தார். ஆனால் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை. வெள்ளத்தால் இடம்பெயர்ந்த ஒருசிலருக்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டன. பாதிப்படைந்த மூன்றரை லட்சம் மக்களுக்கு எந்தவித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை தற்போது மட்டக்களப்பில் தொடர்ந்தும் மழைபெய்து வருவதால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தொகையைவிட மேலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும்நிலை தோறியுள்ளது. அத்துடன் போக்குவரத்து வீதிகளும், வயல்நிலங்களும், குடியிருப்புகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிம் எம்.பி பா.அரியநேத்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக