விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா)வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஜனாதிபதியை கோரியுள்ளார். அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தவேளையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் கட்சியின் பேச்சாளர் ஆசாத் மௌலானா இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக பிரச்சாரப்பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இந்த தாக்குதலை கருணா தரப்பினரே மேற்கொண்டதாக பிள்ளையான் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளனர். இந்தநிலையில் தாக்குதலுக்கு காரணமாக இருந்த கருணாவையும் அவரது குழுக்களையும் எச்சரிக்குமாறு ஜனாதிபதியை பிள்ளையான் கோரியுள்ளதாக ஆசாத் மெலளானா தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதில் கருணா மற்றும் பிள்ளையான் தரப்புகளிடையில் கடும் போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக