வெள்ளி, 25 டிசம்பர், 2009

உலகளவில் மிகப்பெரிய மனித பேரவலம் இடம்பெற்ற பத்து நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்..!!

உலகளவில் பல பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது மிகப்பெரிய மனித பேரவலங்கள் இடம்பெற்ற 10நாடுகளின் பட்டியலை எல்லைகளற்ற மருத்துவர்களுக்கான அமைப்பு (எம்.எஸ்.எஃப்) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் இலங்கையையும் அது பட்டியலிட்டுள்ளது. பாகிஸ்தான், சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஏமன், கொங்கோ ஆகிய நாடுகளும் இடம்பெறுகின்றன. மோதல்களின்போது பொதுமக்கள் அவர்களுக்கான உயிர்காப்பு உதவிகளை பெறுவதிலிருந்து தடுக்கப்படுவது அதிகரித்து வருவதாக பிரான்ஸை தளமாகக் கொண்டு செயற்படும் எம்.எஸ்.எஃப் என்னும் அந்த அமைப்பு கூறியுள்ளது. புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் இறுதிக்கட்டப் போரின்போது, ஆயிரக்கணக்கான மக்கள் உதவிகள் துண்டிக்கப்பட்டும், மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ பராமரிப்புடனும் பெரும் அவதிக்கு உள்ளானதாகவும் அவ்அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் மோதல்கள் இடம்பெற்ற வேளையில் அப்பகுதிக்கு செல்ல தாம் அனுமதிக்கப்படவில்லை என்றும், மோதல் வலயத்ததுக்கு வெளியேயே தாம் பணிசெய்ய அனுமதிக்கப்பட்டதாகவும் அவ்அந்த அமைப்பைச் சேர்ந்த வனசா வான் ஸ்கோர் தெரிவித்ததுடன், அதனால் தாங்கள் பல்வேறு வகையிலான சிரமங்களை எதிர்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக