
கிளிநொச்சி பளை பிரதேச செயலாளர் பிரிவில் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதிக்குப் பின் மீளக்குடியமர்த்துவதற்காக பூர்வாங்க பணிகள் தொடங்கிவிட்டன. முதற்கட்டமாக புலோப்பளை கிழக்கு, புலோப்பளை மேற்கு, இத்தாவில், பளைநகரம் ஆகிய நான்கு கிராமசேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரம் மக்கள் அழைக்கப்படவுள்ளனர்.
இதேவேளை பளை பிரதேச செயலகமும் பிரதேச சபையும் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் தமது பளைப் பகுதியிலுள்ள சொந்த அலுவலகத்தில் இயங்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக