சனி, 17 அக்டோபர், 2009

யாழ்ப்பாணக் கோட்டையைப் புனரமைக்க நெதர்லாந்து அரசாங்கம் முன்வந்துள்ளது

பயங்கரவாதிகளான புலிகளினால் சேதப்படுத்தப்பட்டு பாவனைக்கு உதவாத நிலையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் கோட்டையைப் புனரமைக்க நெதர்லாந்து அரசாங்கம் முன்வந்துள்ளதாக இலங்கையின் புவிசரிதவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த திட்டத்திற்காக சுமார் 300 மில்லியன் ரூபாய்கள் செலவாகுமென எதிர்பார்ப்பதாக புவிசரிதவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் சம்பத் திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் டச்சுக்கோட்டை இரண்டு கட்டங்களாக புனரமைக்கப்படவுள்ளது.
முதற்கட்ட வேலைத்திட்டத்திற்காக 100 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது. இந்த முதலாம் கட்டப் புனரமைப்புப் பணிகள் இரண்டு வருடங்களில் பூர்த்தி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி யாழ்ப்பாணக் கோட்டையானது போர்த்துக்கீசரால் நிர்மாணிக்கப்பட்டு பின்னர் டச்சுக்காரரால் 1658ம் ஆண்டு கைப்பற்றப்பட்டது. இதன் பின்னர் இந்தக் கோட்டையானது 1795ம் ஆண்டு ஆங்கிலேயரால் பொறுப்பேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் மீள் கட்டுமானத்திற்காக முதலீட்டாளர்களுக்கு இலங்கை அரசு அரசு அழைப்பு



காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் மீள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிறீலங்கா கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் சீமெந்து உற்பத்தியை மேற்கொள்வதற்கான நடவடிக்கை செயல்திட்ட முன்மொழிவுகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 6ம் நாள் முதல் ஏற்கவிருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் 1.6 மில்லியன் மெட்ரிக் தொன் சீமந்தை உற்பத்தி செய்யும் வகையிலான தொழிற்சாலை நிர்மாணம் தொடர்பில் அந்த முன்மொழிவு அமைய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.இதற்கு தெரிவு செய்யப்படும் முதலீட்டாளர்கள் சிறீலங்கா சீமெந்து கூட்டுத்தாபனத்துடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் சீமெந்து உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக