வெள்ளி, 18 செப்டம்பர், 2009

வன்னி படைநடவடிக்கையின்போது மீட்கப்பட்ட ஆயுதங்கள் கண்காட்சிக்கு வைக்கப்படவுள்ளன

வன்னி படைநடவடிக்கைகளில் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட இருப்பதாக இராணுவத்தளபதி ஜகத் ஜெயசுசூரிய தெரிவித்துள்ளார். இராணுவத்தின் 60வது ஆண்டு நிகழ்வை முன்னிட்டு இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்நிகழ்வு எதிர்வரும் அக்டோபர் 3ம்திகதி முதல் 7ம் திகதிவரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக