ஞாயிறு, 4 ஜனவரி, 2015

மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து த.தே.கூ. பிரசாரம்.!!

ஜனாதிபதி தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் செங்கலடி மற்றும் வாழைச்சேனைப் பிரதேசங்களில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், பிரசன்ன இந்திரகுமார், கோ.கருணாகரம், இரா.துரைரெட்ணம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராஜா மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரசார பணிகளில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக