திங்கள், 22 டிசம்பர், 2014

மைத்திரியின் விவாத அழைப்பு நிராகரிப்பு தேர்தல் வெற்றியின் பின் சந்திக்க மஹிந்த முடிவு..!!

நல்லாட்சி தொடர்பில் தம்முடன் விவாதத்துக்கு வருமாறு எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, விடுத்த அழைப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தரப்பு நிராகரித்துள்ளது.
இந்த அழைப்பை அமைச்சர் டலஸ் அழகப்பெரும  நிராகரித்துள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் என்று மைத்திரிபால தம்மை தொடர்ந்தும் அழைத்துக்கொள்கிறார்.

இந்தநிலையில் அவர் எதிரணி வேட்பாளராக நினைத்து எவ்வாறு ஜனாதிபதியை விவாதத்துக்கு அழைக்கிறார் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் ஜனவரி 8ஆம் திகதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மைத்திரி, ஜனாதிபதியை சந்திக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் அழகப்பெரும இந்த தகவலை வெளியிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக