திங்கள், 17 நவம்பர், 2014

முன்னாள் புலி உறுப்பினர் கொலை தொடர்பில் மூவர் கைது..!!

மன்னார் கணேசபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் கொலை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் மற்றும் கொலையாளிகளுக்கிடையில் நீண்ட நாட்களாக காணித் தகராறு இருந்து வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொலையாளிகளும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்பதுடன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட டி-56 ரக துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொலைக் குற்றவாளிகள் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பதால், பயங்கரவாதத் தடுப்புப் பொலிசாரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக