
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் இளைஞர் பற்றி எழில்மிகு வசனங்களைப் பேசுகின்றது.
எனினும், இளைஞர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எதிர்காலம் பற்றி நம்பிக்கையில்லாத நிலைமையே காணப்படுகின்றது.
இளைஞர் சமூகம் அதிகளவில் நாட்டில் அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தொழிற்பயிற்சி அதிகாரசபையின் நடவடிக்கைகள் மிகவும் மோசமாகவே காணப்படுகின்றது.
அதிகாரசபையில் அதிகளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறா? இளைஞர்களுக்கான நாளையை உருவாக்குவது?
பயிற்சி வழங்கும் இளைஞர்களின் சோற்றுப் பார்சலில் கூட அதிகாரிகள் தரகுப் பணத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.
இந்த நிலைமை மிகவும் வருந்தத்தக்கது என விஜித ஹேரத் நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக