
நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மக்களின் வீட்டுப் பிரச்சினை பாரதூரமான நெருக்கடி நிலையில் காணப்படுகின்றது.
இந்தப் பிரச்சினை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
வன்னியில் வீட்டுத் திட்டங்கள் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை.
இந்திய வீட்டுத் திட்டங்கள் அமுல்படுத்தப்படாத இடங்களில் வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும்.
வடக்கு இளைஞர் சமூகத்தின் வீட்டுப் பிரச்சினைகள் பாரியளவில் காணப்படுகின்றது.
கடன் அடிப்படையில் வீடுகளை அமைத்துக் கொடுக்கப்படும் போது ää வேலையில்லாப் பிரச்சினை காரணமாக வீட்டுக் கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.
எனவே வடக்கு இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டுமென செல்வம் அடைக்கலநாதன் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக