
மின்சார சபையில் நிகழ்ந்துள்ள ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து அண்மையில் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார்.
அதன்போது அவர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மின்சாரத்துறைக்குப் பொறுப்பாக இருந்த காலத்தில் சுமார் 150 கோடி ரூபா மோசடி நடைபெற்றிருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
அமைச்சர் பவித்திராவின் நாடாளுமன்ற உரையை அடிப்படையாகக் கொண்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிடுமாறு கோரியும், அதற்காக அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள உத்தரவிடுமாறும் கோரி குற்றப் புலனாய்வுத்துறையினர் இந்த மனுவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளனர்.
குற்றப்புலனாய்வுப் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் சார்ஜண்ட் யூ. ஆர். எஸ். சில்வா என்பவரே குறித்த விசாரணைகளுக்குப் பொறுப்பாக
நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ராஜபக்ச குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதுடன், சரத் பொன்சேகா உள்ளிட்ட அரசாங்கத்துக்கு எதிரான அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக